மெக்சிகோவின் அகுவாஸ்காலி யன்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (32).
இவரது உடல் எடை 595 கிலோவை எட்டியதால் மிகவும் சிரமப்பட்டார்.
உலகின் குண்டு மனிதராக (ஆண்) கருதப்படும் இவர், தனது உடல் எடையை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்தார். இதற்காக அந்நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
“முதல்கட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிராங்கோவுக்கு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் இந்த சிகிச்சையின் மூலம் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்புகிறோம். அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அடுத்தகட்டமாக வரும் நவம்பர் மாதம் மீண்டும் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு அவரது வயிறு அளவு குறைக்கப்பட்டு குடல் பகுதி மாற்றியமைக்கப்படும்” என சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.