கான்பூரில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்தப் பணிகள் காரணமாக விராட் கோஹ்லி தன்னை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்க அணித்தேர்வுக் குழுவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.
இதனால்தான் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கோஹ்லியின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இலங்கை தொடரின் போது அவருக்கு ஓய்வு அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரசாத் கூறும்போது, “அவரது பணிச்சுமையைக் கண்காணித்து வருகிறோம். ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து தொடர்ச்சியாக விராட் கோஹ்லி விளையாடி வருகிறார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று பரிசீலித்து வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.